Posts

Showing posts from November, 2019

சிக்கலில் சிக்கிய ‘சும்மா கிழி’!

Image
தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் ட்யூன் திருட்டு என்ற நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’இன்று மாலை வெளியானது. ரஜினியின் வசனத்துடன் தொடங்கும் சும்மாகிழி என்ற இந்த பாடல், தொடக்கத்தில் அண்ணாமலை படத்தில் வரும் வந்தேண்டா பால்காரன் இசையோடு தொடங்கி பின்னர் ரஜினியின் ஆஸ்தான தொடக்க பாடல்களை பாடும் எஸ்.பி.பி நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு - சும்மா கிழி என உரத்த குரலில் ஒலிக்கிறது.  வெளியாகி ஒரு மணி நேரத்திற்குள் 10 லட்சம் பார்வையாளர்களை கடந்த இப்பாடல் தற்போது வரை 25 லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். வெளியானது முதல் ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கும் இப்பாடலுக்கும் இதன் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் புதிய சிக்கலை உண்டாக்கியுள்ளனர் நெட்டிசன்கள். எஸ்.பி.பி பாடியிருக்கும் ‘சும்மா கிழி’ பாடலும் பிரபல ஆன்மிக பாடகர் ஸ்ரீ ஹரி பாடியிருக்கும்  ‘கட்டோட கட்டும்புடி பள்ளிக்கட்ட சொமந்தபடி’ என்ற ஐயப்பன் பாடலும

நெஞ்சை அறுப்பது போன்ற வறட்டு இருமலுக்கு இத குடிங்க!

Image
கொஞ்சம் கால நிலை மாறினாலும் போதும், கணவனுடன் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு வரும் புது மனைவியை போல, இந்த சளியும், இருமலும் நம்முடன் ஒட்டிக் கொண்டு பாடாய்படுத்தும். சில நேரங்களில் உலகிலேயே கொடுமையான பாதிப்பு இந்த சளி, இருமல் தான் என்று தோணும். தும்மி, தும்மி, இருமி, இருமி மொத்த உடல் சக்தியும் கரைந்து போய்விடும்.  எப்படி இருந்தாலும் அதிகபட்சம் ஒரு வாரம் தான் இதன் ஆயுள் என்றாலும், அவதிப்படுபவர்களுக்கு தானே தெரியும் அந்த ஏழு நாட்களின் வேதனை. கால நிலை மாற்றம் காரணத்தால் நீங்களும் வறட்டு இருமலால் பாதிக்கப்பட்டால், இதோ! இந்த 7 எளிய வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி பயன்பெறுங்கள்… எலுமிச்சை மற்றும் தேன்! இருமல், சளி தொல்லை இருக்கும் போது உடலுக்கு வைட்டமின் சி சத்து மிகவும் அத்தியாவசியம். எலுமிச்சையில் வைட்டமின் சி மிகுதியாக இருக்கிறது. எலுமிச்சை சாற்றை இதமான நீரில், தேனுடன் கலந்து பருகி வந்தால் இருமல் சீக்கிரம் குணமாகும். இஞ்சி மற்றும் தேன்! சிறு துண்டு இஞ்சியை நறுக்கி, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமலுக்கு தீர்வு

நேர்மையான லீவ் லெட்டர்: மாணவனுக்குக் குவியும் பாராட்டு; காரணம் சொல்லும் ஆசிரியர்!

Image
பள்ளிக்கு வராமல் விடுமுறை கேட்டு நேர்மையாக லீவ் லெட்டர் எழுதிய அரசுப் பள்ளி மாணவனுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக். அவர் கடந்த 18-ம் தேதி வகுப்பு ஆசிரியர் மணிமாறனுக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ''எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கூறப்பட்டிருந்தது. இக்கடிதத்தை, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆசிரியர் மணிமாறன் வெளியிட்டிருந்தார். இப்பதிவு இணையத்தில் வைரலானது.. பொதுவாக காய்ச்சல், வயிற்றுவலி, உறவினர் இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத காரணங்கள் மட்டுமே மாணவர்களின் விடுமுறைக்கான காரணங்களாக இருக்கும். ஆனால் விளையாட்டைப் பார்க்கச் சென்றதால் விடுமுறை தேவை என்று மாணவர் நேர்மையாக நடந்துகொண்டது எப்படி? அத்தகைய சூழலை உருவாக்கிய ஆசிரியர் மணிமாறனிடமே கேட்டோம். 'கதைத் திருவிழாக்கள் நடத்துவது, நாடகம் உ

ரயிலின் கடைசிப்பெட்டியின் பின்பக்கத்தில் 'X'-ன்னு கொடுக்கப்பட்டு இருக்கும்... அது ஏன் தெரியுமா..??

Image
கார், மோட்டார் சைக்கிள், விமானங்கள், பேருந்துகள் என்றிருந்தாலும் பெரும்பாலான இந்தியர்களுக்கு முதன்மையான போக்குவரத்து என்றால் இன்றும் ரயில்கள் தான். தினமும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களது தேவைகளுக்காக ரயில்வே போக்குவரத்தை பயன்படுத்தி வருவது இன்றும் தொடர்கிறது. கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் வரை ரயில் வழி பயணம் செய்வோர் இன்றும் இருக்கிறார்கள். நீண்ட தூர ரயில் பயணங்களை மேற்கொள்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறார்கள். தொடர்வண்டிகளின் பயன்பாடு குறித்த பலரும் பலது அறிந்திருந்தாலும், ரயில்வே செயல்பாடுகளில் பின்பற்றப்படும் சில விஷயங்கள் இன்றும் நம்மை வியப்பிற்கு உள்ளாக்குகின்றன. அப்படிப்பட்ட ஒரு விஷயம் தான் 'X'. இந்தியாவில் மக்கள் பயணம் செய்யக்கூடிய எல்லா ரயில்களின் கடைசிப்பெட்டியில் 'X' என்ற குறி மஞ்சள் நிறத்தில் வரையப்பட்டு இருக்கும். இது ஆங்கில எழுத்தான எக்ஸா..? அல்லது இதற்கு வேறு பொருள் உள்ளதா..? என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள். Quick Line News NO 1 NEWS YouTube Channel Follow Our Quick line News ரயிலில் பயணம் செய்த அல்லது பயணம் செய்

இரையாக அனுப்பட்ட ஆடு: நட்பாக பழகிய புலி...முடிவில் நடந்த சோகம்!

Image
ரஷ்யாவில் மிருகக்காட்சி சாலையில் இரையாக அனுப்பட்ட ஆடு புலிக்கு நட்பாக மாறியது. ரஷியாவின் விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் ‘அமுர்’ என்ற பெயர் கொண்ட சைபீரிய புலி வளர்க்கப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு இந்த புலிக்கு உணவாக ஆடு ஒன்றை பூங்கா ஊழியர்கள் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த ஆட்டை கடித்து குதறி சாப்பிடுவதற்கு பதிலாக அதன் மீது அன்பு மழை பொழிந்தது. ஆடும், புலியும் நட்பாக பழகின. இதை பார்த்து, ஆச்சரியம் அடைந்த பூங்கா ஊழியர்கள் அந்த ஆட்டை புலியுடன் தொடர்ந்து பழகவிட்டனர். அந்த ஆட்டுக்கு ‘தைமுர்’ என பெயரிட்டு பூங்கா ஊழியர்கள் அழைத்து வந்தனர். ஆடும், புலியும் விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பிரபலமாகின. ஆட்டுக்கு புலி மேல் சுத்தமாக பயம் இல்லாமல் போனதால் அடிக்கடி வம்பிழுத்து விளையாடி சண்டை போட்டது. புலி இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் விளையாடி வந்தது. ஆனால் 2016-ம் ஆண்டு ஜனவரியில் ஆடு தன்னிடம் வம்பிழுத்து விளையாடியபோது பொறுமையை இழந்த புலி திடீரென ஆட்டை வாயில் கவ்வி தூக்கிவீசியது. இதனால் ஆட்டுக்கு உடல் நலக்குறைவு ஏற்ப

இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்….. கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க

Image
we 😍 இஞ்சிப் பால்..! இதைச் சாப்பிட்டால்….. கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க.  அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது

ருத்ராட்சம் அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்

Image
🔯ருத்ராட்சம்  அணிய விரும்பினால் கண்டிப்பாக முழுவதும் படித்து தெரிந்து கொண்டு  மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள் 💞 ருத்ராட்சம் என்றதும் அனைவருக்கும், சிவனும், சிவனடியார்களும் தான் நினைவுக்கு வருவர்.    திருநீறு ருத்ராட்சம் பஞ்சாட்சரம்  (ஓம்நமசிவாய) இவை மூன்றும் சிவனடியார்களின் சிவ சின்னங்கள்; ஆனால், அதன் அருமை, பெருமை களை அறிந்தவர்கள் சிலரே!   ஒருவர் ஏழு ஜென்மங்கள் தொடர்ந்து புண்ணியம் செய்து இருந்தால் மட்டுமே அவர்களுக்கு  ருத்ராட்சம் கழுத்தில் அணியும் பாக்கியம் கிடைக்கும். அல்லது இந்த ஜென்மத்தில்  மஹா புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் மட்டுமே அணிவதற்கு இறைவன் கருணை செய்வார். இவ்வுலகில் பிறந்த அனைவரும்  ருத்ராட்சம் அணிந்து கொள்ளலாம்   ஜாதி மதம் பேதம் இல்லாமல் யார் வேண்டுமென்றாலும்   அணிந்து கொள்ளலாம் பயப்பட வேண்டாம். ருத்ராட்சத்தின் மகிமையை இன்று பலரும் உணர்ந்துள்ளனர். பல யுகங்களாக ஆன்மிக அன்பர்களுக்கு பல்வேறு வகையில் ருத்ராட்சம்  பலன்களை  கொடுத்துக் கொண்டிருந்தாலும், அது தோன்றிய வரலாறு என்பது மிகவும் சுவாரஸ்யமானது.  முன்னொரு காலத்தில் நாரத முனிவர

ரூ.100 கோடியை நெருங்கும் 'கைதி' வசூல்

Image
 தீபாவளிக்கு விஜய் நடித்த 'பிகில்', கார்த்தி நடித்த 'கைதி' படங்கள் வெளியாகின. 'பிகில்' படத்தின் தயாரிப்புச் செலவும், வெளியான தியேட்டர்கள் எண்ணிக்கையிலும் அந்தப் படம் பிரம்மாண்டப் படம் என்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், 'கைதி' படம் மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நிறைவான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இரண்டு படங்களும் இரண்டு விதங்களாகப் பேசப்பட்டன. 'பிகில்' படம் கமர்ஷியல் படம் என்றும், 'கைதி' படம் தரமான படம் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. ஆனால், கமர்ஷியல் ரீதியில் 'கைதி' படம் பெரிய வசூலைக் குவித்தது. அதற்கு படத்திற்கு ஆதரவாக வந்த விமர்சனங்களும் ஒரு காரணமாக அமைந்தது. சில நாட்கள் முன்பு வரை இப்படம் 80 கோடி வசூலை அள்ளியதாகச் சொன்னார்கள். மேலும், 250 தியேட்டர்களில் வெளியான இப்படம் மூன்றாவது வாரத்தில் 350 தியேட்டர்களாக அதிகரித்ததாக தயாரிப்பு நிறுவனமும் அறிவித்தது. இன்றும் நாளையும் படம் நன்றாக வசூலித்தால் அடுத்த வாரத்தில் வசூல் 100 கோடியைத் தாண்டும் என திரையுலகத்தில் சொல்கிறார்கள். அப்படி நடந்தால் கார்த்தியின் முதல் 100

குடும்பத்தினரை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி கேட்ட சிறுவன்…!

Image
அமெரிக்காவில் இருந்து மெக்சிகோவில் குடியேறி அங்குள்ள லா மோரா நகரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கார்களில் சென்று கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பவிஸ்ப் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை ஒரு காட்டு பகுதியில் ஆயுதம் ஏந்திய போதைப்பொருள் கும்பல் வழிமறித்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. இதில் 3 கார்களிலும் தீப்பிடித்து 3 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். கடத்தல் கும்பல் தங்கள் எதிரிகளை தாக்குவதாக நினைத்து தவறான தாக்குதலை நடத்திவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போதைப்பொருள் கும்பலின் தாக்குதலில் உயிர் தப்பிய 13 வயது சிறுவன், 23 கிலோ மீட்டர் நடந்தே சென்று தனது குடும்பத்தினரை காப்பாற்ற உதவி கோரிய உருக்கமான தகவல் தற்போது தெரியவந்துள்ளது. தாக்குதலின்போது அந்த 13 வயது சிறுவன், 7 மாத குழந்தை உள்பட தனது உறவுக்கார சிறுவர்கள் 7 பேரை காப்பாற்றி அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சென்றதும் உறவுக்கார சிறுவர்களை புதரிலேயே இருக்க சொல்லிவிட்

இதுவரை கமல் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள் இதோ..!

Image
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்…. 1. கமல்ஹாசன் நடிக்க வந்தபோது அவருக்கு வயது 5. முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் (1959) அவர் ஆதரவற்ற சிறுவனாக நடித்து இருந்தார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக தங்க பதக்கம் வென்றது கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 2. கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். திரைத்துறையின் அனைத்து வி‌ஷயங்களையும் அவர் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கும் வகையில் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார். மிகச்சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார். 3. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்ப

சுஜித்தின் சடலத்தை கண்ணில் காட்டியிருக்கலாம்: பெற்றோர் ஆதங்கம்..!

Image
சுஜித்தின் சடலத்தை கண்ணில் காட்டியிருக்கலாம்: பெற்றோர் ஆதங்கம்..! திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியதாஸ் (30). இவரது மனைவி கலாமேரி (25). இவர்களது 2வது மகன் சுஜித்வில்சன் (2). இவன் கடந்த 25ம் தேதி மாலை 4.30 மணியளவில் வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். பலநூறு பேர் தீவிரமாக போராடியும் சுஜித்தை உயிருடன் மீட்க முடியவில்லை. ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5ம் நாள் அதிகாலை சுஜித் சடலமாக மீட்கப்பட்டான். பின்னர் ஆம்புலன்ஸ் கொண்டு வந்து குழந்தை விழுந்த இடத்தில் தயாராக வைத்தனர். தொடர்ந்து ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தை சடலத்தை மீட்டதாக கூறி புளு கலர் பிளாஸ்டிக் கவரில் வைத்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், அங்கு ஏற்கனவே தயாராக இருந்த சவப்பெட்டியில் வைத்தனர். உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு ெசல்லப்பட்டு ஆவராம்பட்டி அருகே உள்ள பாத்திமாபுதூர் கிறிஸ்தவ கல்லறையில் காலை 8 மணியளவில் குழந்தை சுஜித் உடல் இருந்த சவப்பெட்டியை நல்லடக்கம் செய்தனர

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்க சட்டம் கொண்டுவரப்படுமா? - கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம்

Image
சபரிமலை அய்யப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுப்பதற்காக சட்டம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார். திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த கட்டுப்பாட்டை ரத்து செய்தது. அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு முடிவு செய்தது. இதனால், கடந்த ஆண்டு அய்யப்பன் கோவிலுக்கு சில பெண்கள் வந்தபோது, போராட்டங்களும், மோதலும் வெடித்தன. For More Updates Follow Our Hello & This Website

ரூ.2000-க்கு 50 முட்டை சாப்பிடும் பந்தயம், 42-வது முட்டையில் பலியானவர்...

Image
உத்தரபிரதேசத்தில் 50 முட்டை சாப்பிடும் பந்தயத்தில் 42-வது முட்டை சாப்பிடும்போது ஒருவர் பலியாகி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் சுபாஷ் யாதவ் ( வயது 42). இவர் தனது நண்பர்களுடன் ஜான்பூரின் பிபிகஞ்ச் மார்கெட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தனது நண்பர்களுடன் முட்டை சாப்பிடும்போது ஒருவர் எத்தனை முட்டைகளை சாப்பிடலாம் என்பது பற்றி விவாதம் எழுந்துள்ளது. இந்த விவாதத்தின் இறுதியாக பந்தயம் கட்டியுள்ளனர். அதன்படி 50 முட்டைகளை சாப்பிட்டுக்கொண்டே ஒரு பாட்டில் மது குடிக்க வேண்டும் எனப் பந்தயம் கட்டப்பட்டுள்ளது. பந்தய தொகையாக 2 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு 250 ரூபாய் முன்பணமாக பெறப்பட்டுள்ளது. இதன்பின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டு முட்டை சாப்பிட ஆரம்பித்துள்ளார் சுபாஷ். மது குடித்துக்கொண்டே முட்டைகளை சாப்பிட ஆரம்பித்தவர் 41 முட்டைகளை சாப்பிட்டுள்ளார். 42-வது முட்டையை சாப்பிடும்போது அவர் மயக்கமடைந்து கீழே விழ அருகில் இருந்தவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். உடனே அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சுபாஷை மாவட்ட