சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களுக்கு அனுமதி மறுக்க சட்டம் கொண்டுவரப்படுமா? - கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம்
சபரிமலை அய்யப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயது பெண்களுக்கு அனுமதி மறுப்பதற்காக சட்டம் கொண்டுவரப்படுமா என்பது குறித்து கேரள சட்டசபையில் பினராயி விஜயன் விளக்கம் அளித்தார். திருவனந்தபுரம், சபரிமலை அய்யப்பன் கோவிலில், 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, அந்த கட்டுப்பாட்டை ரத்து செய்தது. அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த கேரளாவை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு முடிவு செய்தது. இதனால், கடந்த ஆண்டு அய்யப்பன் கோவிலுக்கு சில பெண்கள் வந்தபோது, போராட்டங்களும், மோதலும் வெடித்தன. For More Updates Follow Our Hello & This Website
Comments
Post a Comment